
நீதிபதி ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், நீதிபதிகளான, புவனேக அலுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என ஜனாதிபதியினால் நீதிமன்றத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
குறித்த நீதிபதிகள் குழு எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதியின் வேண்டுகோள் தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது

