ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்க 3 பீடங்கள் இணைந்து தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்க 3 பீடங்கள் இணைந்து தீர்மானம்!

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளிலிருந்து வேட்பாளராக களமிறக்கப் போகின்றவர் கொண்டிருக்க வேண்டிய  பொது நியதிகளை முன்வைப்பதற்கு மூன்று பௌத்த பீடங்களினதும் மகா சங்கத்தினர் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர்.

இந்த நியதிகளில், ஜனாதிபதி வேட்பாளர் நாட்டை நிருவகிக்கும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைமை தொடர்பிலும் கொள்கை ரீதியிலான விடங்களை முன்வைக்கவுள்ளதாகவும் அஸ்கிரிய பீட பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி பி.எம்.ஐ.சி.எச். இல் இந்த விடயங்களை அறிவிக்கும் விசேட நிகழ்வொன்று மகா சங்கத்தினர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும், இதற்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளராக போட்டியிட எதிர்பார்த்துள்ளவர்கள் அழைக்கப்படவுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-Daily ceylon

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.