வைத்தியர் ஷாபி தொடர்பில் முறைப்பாடளித்த 3 பெண்களுக்கு நிகழ்ந்த இரகசிய சோதனை அம்பலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியர் ஷாபி தொடர்பில் முறைப்பாடளித்த 3 பெண்களுக்கு நிகழ்ந்த இரகசிய சோதனை அம்பலம்!

சட்டவிரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை அளித்த மூன்று தாய்மாருக்கு போதனா வைத்தியசாலையில் இரகசியமான முறையில் எச்.எஸ்.ஜீ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக நேற்று நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டது.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீர பண்டாரவின் உத்தரவிற்கமைய இவ்வாறு வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்த சிலரிடம் எச். எஸ்.ஜீ சோதனை நடத்தியதாக குறித்த வைத்தியசாலையின் எக்ஸ்-ரே (கதிர்வீச்சு) தொடர்பிலான வைத்திய நிபுணர்கள் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலம் ஊடாக இவ்வாறு வெளிப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ். திசேரா குருணாகலை பிரதான நீதிவான் சம்பத் ஹேவா வசத்திற்கு அறிவித்தார்.

வைத்தியர் ஷாபி விவகார வழக்கு விசாரணைகள் இன்று குருணாகல் நீதிவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதன்போதே இந்த விடயம் அம்பலத்திற்கு வந்தது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.