இம்மாத இறுதியில் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலை நியமனங்கள் ஊர்ஜிதம்! - கபீர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்மாத இறுதியில் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலை நியமனங்கள் ஊர்ஜிதம்! - கபீர்

இம்மாதம் இறுதி காலப்பகுதியில் மலையகத்தில் உள்ள தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க தயாராக உள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பெற்றோலிய வள அமைச்சர் கபிர் ஹசிம் தெரிவித்துள்ளார்.

வெளிஒய ஊடாக வட்டவலை வரைக்குமான 319.8 மில்லியன் ரூபாய் செலவில் செப்பனிடபட்ட காப்பட் வீதியினை நேற்று திறந்து வைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது உறையாற்றிய அமைச்சர், எதிர்வரும் 30,31ம் திகதிகளில் தமிழ் இளைஞர் யுவதிகள் 16,000 ஆயிரம் பேருக்கு இந்த நியமனம் வழங்கபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ள தோட்ட வீதிகளை புனரமைக்க விசேடமான முறையில் வேண்டுகோள் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் முன்வைத்துள்ளார். அதன் அடிப்படையில் தோட்ட புறங்களில் உள்ள வீதிகளை செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இந்த நாட்டை நாங்கள் பொறுபேற்ற போது 74 கோடி ரூபா கடன் இருந்தது, குப்பை பிரச்சினை காணபட்டது, சைட்டம் பிரச்சினை காணபட்டது, மக்களிடயே வேறுபாடு காணபட்டது இவை அனைத்திற்கும் நாங்கள் ஒரு குறுகிய காலத்தில் தீர்வினைபெற்று கொடுத்துள்ளோம்.

நாங்கள் தேசிய அரசாங்கத்தை அமைத்தோம். ஆனால் நான்கு வருடங்கள் இந்த அரசாங்கம் இருந்த போது திடீர் என எமது காலை வாரினார்கள், ஆகையால் தான் நாங்கள் தனியான ஒரு அரசாங்கத்தை அமைத்தோம். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை ஒவ்வொரு தேர்தல் பிரிவுக்கும் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக 3000 மில்லியன் ஒதுக்கியுள்ளோம்.

இதுவரை காலமும் சமுர்த்தி பெறாத ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி முத்திரையை பெற்று கொடுத்துள்ளோம். இந்த மாதம் முதல் சமுர்த்தி முத்திரை கிடைக்காதவர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.