பிக்குகளிடம் மன்னிப்பு கோருவாரா ரஞ்சன்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிக்குகளிடம் மன்னிப்பு கோருவாரா ரஞ்சன்?

என்னிடம் இதுவரையில் யாரும் மன்னிப்புக் கோருமாறு வேண்டவில்லையெனவும், மூன்று பீடங்களினதும் முக்கிய தேரர்கள் யாராவது தன்னுடைய குற்றச்சாட்டு தவறானது எனத் தெரிவித்து அதற்காக மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கூறினால், தான் மன்னிப்புக் கோருவதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.

நேற்று (17) அலரி மாளிகைக்குச் சென்று பிரதமரைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

வெட்டுவதாகவும், கொலை செய்வதாகவும் என்னை அச்சுறுத்தும் காவியுடை தரித்தவர்களிடம் சென்று எனக்கு மன்னிப்புக் கோர முடியாது. இவ்வாறான பிக்குகள் உண்மையான பௌத்த பிக்குகள் அல்லர். இவர்கள் ஐ.ஆர்.சி. காரர்கள் எனவும் இவர்களின் முதுகுகளில் பச்சை குத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.