புத்தளத்தில் இரசாயன முறையில் கழிவகற்றும் வேலைத்திட்டம் ஆரம்பானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தளத்தில் இரசாயன முறையில் கழிவகற்றும் வேலைத்திட்டம் ஆரம்பானது!

அருவக்கலு பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தும் வகையில் இரசாயன முறையில் கழுவுகளை அகற்றும் பணிகள் நேற்று (16) ஆரம்பிக்கப்பட்டதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதற்கட்ட நடவைக்கையாக கொழும்பு மாநகர சபை கழிவுகள் எடுத்துச் செல்லவிருப்பதோடு, அதற்கமைவாக நேற்று (16) 10 கழிவுகள் நிரம்பிய லொரிகள் சென்றதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் சமூக ஆய்வாளர் நிமல் பிரேமதிலக்க தெரிவித்தார்.

புத்தளம், அருவக்கலு பிரதேசத்தில் அமையவிருக்கும் இரசாயன கழிவகற்றல் திட்டத்திற்காக கழிவுகள் புகையிரத வண்டிகளிலேயே எடுத்துச் செல்ல இருப்பதோடு, புகையிரத பாதைகள் புணர் நிர்மாணம் செய்வதன் காரணமாகவே லொரிகளில் எடுத்துச் செல்லப்படுவதாக பிரேமதிலக்க தெரிவித்தார்.

கழிவு சேகரிக்கும் இடம் வரையிலான புகையிரத பாதை வரும் மார்ச் மாதத்திற்குள் பூர்த்தியடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது கழிவு சேகரிக்கும் இடத்தில் 600 டொன் அளவில் சேகரிக்க முடியும் எனவும், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் 1200 டொன் வரையில் சேகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.