பௌத்தர்களாக ஒன்றுபட்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக துடைத்தெறிவோம்! -ஞானசார தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பௌத்தர்களாக ஒன்றுபட்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக துடைத்தெறிவோம்! -ஞானசார தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து முழுமையாக துடைத்தெறிய வேண்டுமாயின் பௌத்த பிக்குகள் அரசியல் பேதங்களை துறந்து பௌத்த சாசனத்துக்கு அமைய ஒன்றுப்பட வேண்டும். பெரும்பாலான சிங்கள மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாகவே வாழ்கின்றார்கள் என தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பௌத்த மதத்தின் மரபுரிமைகளும், கோட்பாடுகளும் பாதுகாப்பப்பட வேண்டுமாயின் சிங்கள இளம் தலைமுறையினர் அனைவரும் பௌத்த மதத்தை முழுமையாக, முறையாக பின்பற்ற வேண்டும். எனவும் தெரிவித்தார்.

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பௌத்த நாட்டின் மரபுரிமைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. அரசியல்வாதிகள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் காலத்தில் எவ்வளவு நிதி சேமித்துக் கொள்ளலாம் என்று மாத்திரமே நினைக்கின்றார்களே தவிர் நாடு தொடர்பில் எவ்வித அக்கறையும் கொள்வது கிடையாது. தற்போ து நாடு எதிர்க் கொண்டுள்ள சவால்களுக்கு பௌத்த மத பிக்குகளினால் மாத்திரமே தீர்வு வழங்க முடியும். அரசியல்வாதிகள் தயவு செய்து விலகிக் கொள்ள வேண்டும்.

பௌத்த மதத்தை பாதுகாத்தல் இயல்பாகவே நாடு பாதுகாக்கப்படும் பௌத்த பிக்குகளின் மத்தியில் உள்ள வேறுப்பாடுகளை அரசியல்வாதிகள் தங்களின் சுய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். பௌத்த மத சாசனத்திற்கு அமைய அனைத்து பிக்குகளும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றுப்பட வேண்டும். சிங்கள இளைஞர்களின் கைகளிலே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.

-Metro

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.