இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய தடை!

srilanka army
இராணுவ சீருடைகளுக்கு இணையான உடைகளை இலங்கையில் பயன்படுத்த தடைவிதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இராணுவ சீருடைகை்கு இணையான உடைகளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே புதிய திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்காலத்தில் இராணுவ சீருடைக்கு இணையான உடைகளை தம்வசம் வைத்திருப்பது, விற்பனை செய்வது என்பன சட்டவிரோதமான குற்றமாக கருதப்படும்.

இதனை தவிர 1980 இலக்கம் 44 வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டமூலத்தில் திருத்தங்களை செய்வும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான யோசனையையும் ஜனாதிபதியே முன்வைத்திருந்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.