சிவப்புத் தம்பிகளுக்கு வஹாப் வாதிகளின் ஆபத்து விளங்குவதில்லை! -ஞானசார தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிவப்புத் தம்பிகளுக்கு வஹாப் வாதிகளின் ஆபத்து விளங்குவதில்லை! -ஞானசார தேரர்

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் இஸ்லாம் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து அந்தப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவப்புத் தம்பிகள் மௌனம் சாதிப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.

இன்று (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனை தெரிவித்தார்.

விசேடமாக மொரட்டுவ பல்கலைக்கழகம், ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பவற்றை இதற்கு முன்னுதாரணமாக குறிப்பிடலாம். இவற்றில் நடைபெறும் அடிப்படைவாத நடவடிக்கைகளை சாட்சியுடன் நிரூபிக்கலாம் எனவும் தேரர் குறிப்பிட்டார்.

இந்தப் பல்கலைக்கழகங்களில் வஹாப் வாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வேறு மாணவர் அமைப்புக்களுக்கும் இந்த விடயங்கள் தென்படுவதில்லை. மூச்சுக் குழாய்கள் சிவப்பாக இருக்கும் சிவப்புத் தம்பிகளுக்கு அவர்களது எதிர்காலம்தான் அழிந்துகொண்டிருப்பது விளங்குதில்லையெனவும் தேரர் மேலும் தெரிவித்திருந்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.