புலிகள் போல் உறுமிக்கொண்டு திரள்வதையும், சிங்கள பௌத்த மக்களை அச்சுறுத்துவதையும் தமிழர்கள் நிறுத்த வேண்டும் - பொதுபல சேனா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலிகள் போல் உறுமிக்கொண்டு திரள்வதையும், சிங்கள பௌத்த மக்களை அச்சுறுத்துவதையும் தமிழர்கள் நிறுத்த வேண்டும் - பொதுபல சேனா

புலிகள் போல் உறுமிக்கொண்டு திரள்வதையும், சிங்கள பௌத்த மக்களை அச்சுறுத்துவதையும் தமிழர்கள் நிறுத்த வேண்டும்!

இது சிங்கள - பௌத்த நாடு என்பதை அவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். கன்னியாப் பிரச்சினை தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் சிங்கள பௌத்த மக்களுக்கே இருக்கின்றது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

கன்னியாவில் அமைதிவழியில் போராடிய தமிழ் மக்கள் மீது சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது:

பிரச்சினைகளுக்குப் போராட்டம் என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுவிப்பதோ அல்லது வன்முறைகளில் இரு இனத்தவர்களும் இரு மதத்தவர்களும் ஈடுபடுவதோ அழகல்ல.

இந்த ஆட்சி இனக்கலவரத்துக்கும், மதத்கலவரத்துக்கும் தூபமிட்டுள்ளது. விரைவில் ஆட்சி மாற்றம் இடம்பெறும். பௌத்த தேரர்களின் பங்களிப்புடன் சிங்கள ஆட்சி விரைவில் மலரும்.

அந்த ஆட்சியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவின இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழும் நிலமையை நாம் உருவாக்குவோம் என்றார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.