ஆகஸ்ட் 5 புதிய கூட்டணி அமைக்கப்படும் - மனோ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆகஸ்ட் 5 புதிய கூட்டணி அமைக்கப்படும் - மனோ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில் புதிய கூட்டணி அமைப்பதற்காக ஆகஸ்ட் 05ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியின் சின்னம் அன்றைய தினம் முன்வைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவிஸ்ஸாவனை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதாகவும், இரவு விழுந்த குழிக்குள் பகலில் விழப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மிகவும் பிரபலமான கட்சியை பிளவுபடுத்தி இல்லாமல் ஒழிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழு அமைத்துக் கொண்டிருப்பவர்களிடம் அமைச்சர் ​வேண்டுகோள் விடுத்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.