நீர்கொழும்பில் 3 முஸ்லிம் கடைகளுக்கு முன்பாக பன்றித் தலைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீர்கொழும்பில் 3 முஸ்லிம் கடைகளுக்கு முன்பாக பன்றித் தலைகள்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவபிட்டிய புனித செபஸ்த்தியார் தேவாலயம் இன்று (21) காலை திறக்கப்பட்ட நிலையில், கட்டுவிபிட்டிய தேவாலயத்துக்கு அண்மித்ததாக உள்ள மீரிகமை பிரதான வீதியில் உள்ள சில கடைகளுக்கு முன்பாக பன்றிகளின் தலைகளை இனந்தெரியாத நபர்கள் தொங்கவிட்டுள்ளனர்.

மீரிகமை வீதி , மைமாகொடை பகுதியில் உள்ள மூன்று கடைகளின் முன்பாக இவ்வாறு பன்றிகளின் தலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை (20) இந்த பிரதேசத்தில் உள்ள சில கடைகளுக்கு சென்ற இனந்தெரியாத குழு ஒன்று இன்று (21) ஞாயிற்றுக்கிழமை கட்டுவபிட்டிய தேவாலயம் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் கடைகளை மூட வேண்டும் என்று கூறி அதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று (21) காலை கடை உரிமையாளர் ஒருவருக்கு அவரின் கடையின் முன்பாக பன்றின் தலை தொங்கவிடப்பட்டுள்ளதாக ஒருவர் தகவல் வழங்கியுள்ளார். கடை உரிமையாளர்கள் அதனை பார்க்கச் சென்றபோது மூன்று கடைகளின் வாயில் கதவில் பன்றிகளின் தலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளதை கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

-metro

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.