வேறு பேச்சுக்கு இடமில்லை - இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வேறு பேச்சுக்கு இடமில்லை - இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்!

போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்காமையின் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது. 

இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோருக்கு இடையான சந்திப்பு இன்று காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. 

நாளை பிற்பகல் 02.00 மணிக்கு நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்த போதிலும் அதற்கு புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் இணங்கவில்லை என்று பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.