வீட்டு வாசலில் தூங்கிய நபர் - யானை மிதியில் பலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீட்டு வாசலில் தூங்கிய நபர் - யானை மிதியில் பலி

திம்புலாகல, அலவாகும்புர கிராமத்தில் யானை மிதித்ததன் விளைவாக நபர் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று (09) அதிகாலை 03 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அலவாகும்புர பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தனது உறவினர் ஒருவர் வீடொன்றிற்கு சென்றிருந்த குறித்த நபர் அதிக வெப்பநிலை காரணமாக வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த போது யானை அவரது தலையை மிதித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.