தவ்ஹீத் ஜமாத் பேரில் தேரரை மிரட்டி 10 கோடி ரூபா பணம் பறிக்க முயன்ற சிங்களவர்கள் மூவர் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தவ்ஹீத் ஜமாத் பேரில் தேரரை மிரட்டி 10 கோடி ரூபா பணம் பறிக்க முயன்ற சிங்களவர்கள் மூவர் கைது!!

தவ்ஹீத் ஜமாத் பேரில் தேரரை மிரட்டி 10 கோடி ரூபா பணம் பறிக்க முயன்ற சிங்களவர்கள் மூவர் கைது!!

தம்மைத் தீவிரவாத தவ்ஹீத் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் என அச்சுறுத்தி, தம்புள்ள ரஜமகா விகாரை மற்றும் அங்கியங்கும் கோயிலின் பொறுப்புதாரி ராகுல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிங்கள சமூகத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு குறித்த பௌத்த துறவியை கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி இவ்வாறு பணம் பறிக்க முயன்றுள்ளதுடன் அவரைக் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டி வந்துள்ளனர்.

பின்னர் இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16, 25 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் கார்டே தொலைபேசி அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, இப்பாதக செயலைச் செய்த மூவரும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என தம்புள்ள பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதோடு மேலதிக விசாரணைகளை தம்புள்ள பொலிஸ் தலைமையகம் மேற்காண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source - Sonakar

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.