
குடிவரவு, குடியகல்வு சட்டத்தினை மீறியதுடன், செல்லுபடியான வீசா இல்லாமல் வெளிநாட்டவர்கள் இருப்பதாக முல்லேரியா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் முல்லேரியா-கெலனிமுல்ல பிரதேசத்தில் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 32,28 மற்றும் 12 வயதுகளையுடைய பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்களாகும்.
சந்தேக நபர்கள் இன்று (05) அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
முல்லேரியா பொலிசார் இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

