பங்களாதேசத்தினை சேர்ந்த மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பங்களாதேசத்தினை சேர்ந்த மூவர் கைது!

சட்ட விரோதமாக இலங்கையில் இருந்த மூன்று வெளி நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு, குடியகல்வு சட்டத்தினை மீறியதுடன், செல்லுபடியான வீசா இல்லாமல் வெளிநாட்டவர்கள் இருப்பதாக முல்லேரியா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் முல்லேரியா-கெலனிமுல்ல பிரதேசத்தில் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 32,28 மற்றும் 12 வயதுகளையுடைய பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்களாகும்.

சந்தேக நபர்கள் இன்று (05) அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

முல்லேரியா பொலிசார் இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.