புகை வண்டியுடன் மோதிய முச்சக்கர வண்டி - பரிதாபமாக ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புகை வண்டியுடன் மோதிய முச்சக்கர வண்டி - பரிதாபமாக ஒருவர் பலி!

மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகை வண்டி இன்று (03) பிற்பகல் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி புகைவண்டி வீதியை கடக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான நபர்கள் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ள படகு உற்பத்தி தொழிற்சாலையொன்றின் பணியாளர்கள் என தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.