மூன்றாவது நாளாக துக்கம் அனுஷ்டித்து வரும் காத்தான்குடி மக்கள் - ஊடகங்களில் வெளிவராத உண்மை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்றாவது நாளாக துக்கம் அனுஷ்டித்து வரும் காத்தான்குடி மக்கள் - ஊடகங்களில் வெளிவராத உண்மை


மூன்றாவது நாளாக துக்கம் அனுஷ்டித்து வரும் காத்தான்குடி மக்கள். இருட்டடிப்புச் செய்யும் ஊடகங்கள்.

கடந்த ஞாயிறு அன்று நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத மிலேச்சத்தனமான தாக்குதலைக் கருதி கடந்த மூன்று தினங்களாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் பொது நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி வர்த்தக சங்கம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா போன்ற நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று காத்தான்குடி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் துக்க தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.

காத்தான்குடி மக்களின் துக்க தினச் செய்தியை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒரு சில தமிழ் ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்கின்றது வருந்தத்தக்கது.

ஊடகப் பணி என்பது நடுநிலை பேணி மக்களுக்கு உண்மை நிலைமையை எடுத்தியம்புவதே உண்மையான ஊடகப் பணியாகும் அதை விடுத்து ஒரு சமூகத்தின் செய்தியை மட்டும் வெளியிட்டால் அது அந்த சமூகத்தின் ஊடகமாக மாத்திரமாகவே கருதப்படும்.

சகோதரர் ஜூனைத் முஜீப்





Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.