மண்மேட்டில் மோதி முச்சக்கர வண்டி கோர விபத்து !!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மண்மேட்டில் மோதி முச்சக்கர வண்டி கோர விபத்து !!


நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் மண்மேட்டில் மோதிய முச்சக்கரவண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

விபத்திற்கு உள்ளான முச்சக்கரவண்டியில் சாரதியும், அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோர் பயணித்துள்ளனர். அவர்கள் நால்வரும் காயங்களுக்கு உள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.