வில்பத்து காரணமாக இன்று பாராளுமன்றம் சூடு பிடித்தது - பலர் பொங்கி எழுந்தனர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வில்பத்து காரணமாக இன்று பாராளுமன்றம் சூடு பிடித்தது - பலர் பொங்கி எழுந்தனர்!!

உலக காடுகள் தினமான மார்ச் 21 இனை முன்னிட்டு பலராலும் பேசப்பட்ட விடயமாக வில்பத்து காடழிப்பு அமைந்தது. எவறெனும் காடழிப்பில் உண்மையாக ஈடுபட்டிருந்தால் தண்டனை நிறைவேற்றப்படுவது அவசியமாய் உள்ளது.

வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக இன்று (22) பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னனி (JVP) தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசானாயக்க அவர்களினால் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களிடம் தொடுக்கப்பட்ட கேள்வியுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வினாவை தொடுத்தவுசன் பாராளுமன்றத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்ததுடன் சபாநாயகரும் தலையிட்டார்.

இதனடிப்படையில், வில்பத்து சரணாலயம் அருகில் அமைந்திருக்கும் விலத்திக் குளம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகளை அழித்து குடியமர்த்தியுள்ளதாக கூறி நாகானந்த கொடிதுவக்கு மற்றும் பத்திரிகையாளர் மலிந்த செனவிரத்ன அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் ஜூன் 28 ஆம் திகதி பரிசீலனைக்கு கொண்டுவருவதாக நீதிமன்றத்தினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மனுவினை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் வன பாதுகாப்புத் திணைக்கள உயர் அதிகாரி அடங்காலாக பொறுப்பு கூற வேண்டும் என பெயரிடப்பட்டிருந்தது.

இதன் போது, அமைச்சர் ரிசாட் பதியுத்தீனின் சொத்துகுவிப்பு தொடர்பாக தேடி பார்க்க இலஞ்சம் மற்றுன் ஊழல் குற்றவியல் ஆணைக்குழுவுக்கு மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ரீதியில் புகார் செய்யப்பட்டிருந்தது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.