நியூசிலாந்தில் அரசாங்கமே ஏற்பாடு செய்த ஜும்ஆ தொழுகை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நியூசிலாந்தில் அரசாங்கமே ஏற்பாடு செய்த ஜும்ஆ தொழுகை!

நியூசிலாந்தில் அரசாங்கமே ஏற்பாடு செய்த ஜுமுஆ தொழுகை!

இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியோடு முஸ்லிம்களை கொலை செய்த இனவெறியர்களுக்கு அடுத்த மரண அடி! இன்று (22) நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரின் ஹாக்லி பார்க்கில் திறந்த வெளியில் ஜுமுஆ தொழுகையை பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் ஒன்று கூடி நிறைவேற்றினர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்...

இந்த நிகழ்வை அரசாங்கமே ஏற்பாடு செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,

இதில் அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டன் உட்பட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

பெரும்பாலான பிறமத சகோதரிகள் தங்களது தலையில் முக்காடு அணிந்த நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அந்த நாட்டின் பிரதமர் உட்பட.

இஸ்லாத்தை அழிக்க வேண்டு என்ற இனவெறியர்களின் ஆசையில் மண் அள்ளிப்போடும் விதமாக

அந்த அரசாங்கமே ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் கூறிய வார்த்தைகள் அனைவரது உள்ளத்தையும் நெகிழச் செய்தது.

முதலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிக்காட்டிய ஒருபொன்மொழியை நியூசிலாந்து பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அந்த பொன்மொழி:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும் கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களின் நிலையானது, ஓர் உடலின் நிலையைப் போன்றதாகும்.
உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால், அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கின்றன.
அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது.

நூல்: முஸ்லிம் 5044

நாங்களும் உங்களது துக்கத்தில் பங்கெடுக்கின்றோம்.

நாம் அனைவரும் ஒருவரே! என்று நியூசிலாந்து பிரதமர் கூறிய வார்த்தைகள் அனைவரையும் ஈர்த்தது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.