அவசர தரையிறக்கம் செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவசர தரையிறக்கம் செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

லண்டனிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL504 விமானம் இன்று (25) அவசர தரையிறக்கம் செய்துள்ளது.

மருத்துவ அவசரநிலை ஏட்பட்டதின் காரணமாகவே இவ்வாறு அருகில் இருக்கும் விமான நிலையமான ருமேனியா நாட்டின் Bucharest சர்வதேச விமான நிலையத்தின் அனுமதியோடு தரையிறக்கம் செய்தது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இக்கொள்கையை கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி, விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் உடனடியாக நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.


சர்வதேச விமான விதியின் தொழில்நுட்ப விதிமுறைகளின்படி ஒரு தடவை விமானம் தரை இறக்கப்பட்டால் மறுபடியும் பொறியியல் சோதனைகளின் பின்னர்தான் பறக்க முடியும், மேலும் Bucharest சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பொறியாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

விரைவில் குறித்த விமானம் நாடு திரும்பும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.