
ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளர் காரியாலத்தினூடாக இந்நாட்டிற்கு நல்லிணக்கம், பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகள் ஊக்குவிப்பு சம்பந்தமாக இதற்கு முன் வெளியிடப்பட்ட அறிக்கை உத்தியோகபூர்வமாக இன்று நடைபெறவிருக்கும் அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தத்து.
மேற்குறிப்பிட்ட அறிக்கையினை ஐக்கிய நாடுகளிக் உயர் ஆணையாளர் மிச்செல் பெச்சலே அவர்களினால் முன்வைக்கப்பட்டதினை தொடர்ந்து இலங்கையை பற்றி சில தகவல்களை அறிவிக்கவும் உள்ளார்.
இதனடிப்படையில் ஐக்கிய நாடுகளிக் மனித உரிமைகள் அமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன அவர்கள் உட்பட பிரதிநிதிகளும் மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கையினை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பிற்பாடு கருத்துக்கள் தெரிவிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
வெளிவிவகார அமைச்சர் உட்பட பேராசிரியர் சரத் அமுனுகம, வெளிவிவகார செயலாளர் ரவினாத ஆரியசிங்க, ஜெனீவா நகர ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஏ. எல். ஏ. அஸீஸ் அவர்களுடன், பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.