24 கிலோ கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

24 கிலோ கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது !!!


நேற்று (10) மாலை 24 கிலோ கேரள கஞ்சாவினை கையிருப்பில் வைத்திருந்த 5 நபர்களை களுத்துறை காவல் நிலைய சட்ட அமுலாக்கப் பிரிவு கைது செய்துள்ளது. 

காவல் துறை பிரிவினரால் மெற்கொண்ட அதிரடி சோதனைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் அலுத்கமை மற்றும் தர்கா நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23, 32, 35, 38 மற்றும் 47 வயதுகளை கொண்டவர்கள் எனவும், இவர்களை அலுத்கம காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்க‌ள் அறியக் கிடைத்தன. 

கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் இன்று (11) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். 

மேற்கொண்டு அலுத்கம காவல் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.