2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் மே 2025 இல் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, நடைமுறைப் பரீட்சைகள் மே 21 முதல் 31 வரை நாடு முழுவதும் 1,228 பரீட்சை நிலையங்களில் 171,100 பரீட்சார்த்திகளுடன் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நடைமுறைத் தேர்வுகள் இரண்டிலும் மாணவர்கள் தோற்றுவது கட்டாயம் என்று பதீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களும் பாடங்களின் இறுதி முடிவுகளைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும்.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் சேர்க்கை படிவங்கள் மற்றும் நேர அட்டவணைகள் சம்பந்தப்பட்ட அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரர்களின் சேர்க்கை படிவங்கள் அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள குடியிருப்பு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சை சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம், பரீட்சை அனுமதி அட்டைகளை 2025 மே 19 முதல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் கூறுகிறது.
மேலும் விசாரணைகளுக்கு, விண்ணப்பதாரர்கள் 011-2784537, 2786616, 2784208, 011-2786200, 2784201 அல்லது 1911 என்ற அவசர அழைப்பு மூலம் பரீட்சைத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம் .