2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் சில நேர்மறையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதோடு, இந்த விஷயத்தில் விரைவான மற்றும் நியாயமான விசாரணைகளின் இறுதி இலக்கு குற்றவாளிகள் யார், யார் அந்தக் கொடூரமான செயலுக்கு உதவினர் மற்றும் உடந்தையாக இருந்தனர் என்பதைக் கண்டறிவதாக இருக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.