'கிளப் வசந்த' துப்பாக்கிச் சூடு; உத்தியோகபூர்வ பொலிஸ் அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

'கிளப் வசந்த' துப்பாக்கிச் சூடு; உத்தியோகபூர்வ பொலிஸ் அறிக்கை!


இன்று (08) காலை அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரில் வந்த ஆயுததாரிகள் இரண்டு T56 துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


பச்சை குத்தும் நிலையமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ‘கிளப் வசந்த’ எனும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 


உயிரிழந்தவர்கள் அதுருகிரிய மற்றும் கொழும்பு 07 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், காயமடைந்த மேலும் இரு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் கடுவெல கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.