4 வயது குழந்தைக்கு சித்திரவதை; தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

4 வயது குழந்தைக்கு சித்திரவதை; தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது!


நான்கு வயது குழந்தையை கொடூரமாக சித்திரவதை செய்த தாயும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


வெலிகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் 25 வயதுடைய பெண் ஒருவர் தனது நான்கு வயது மகனை அடித்து, உதைத்து  குழந்தையை வீட்டுக்கு வெளியே உள்ள கேட்டில் கயிற்றினால் கட்டி வைத்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், நேற்று (06) இரவு 9.00 மணியளவில் இதனைப் பார்த்த பிரதேசவாசிகள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.


அதன்படி, வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குமார உள்ளிட்ட அதிகாரிகள் சந்தேகநபரான பெண்ணைக் கைது செய்ததுடன், சித்திரவதைக்கு உள்ளான நான்கு வயது குழந்தையை வெலிகம வலான மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதன்போது, வெலிகம முதுகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதான குழந்தையின் தாயும் அவரது கள்ளக்காதலரும் சேர்ந்து குழந்தையை தாக்கி சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.


இதன்படி, அவரது கள்ளக்காதலரையும் வெலிகம பொலிசார் கைது செய்தனர்.


மின்சார கேபிள் ஒன்றை சேதப்படுத்தியதாகக் கூறி குழந்தையை இவர்கள் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை வெலிகம பொலிஸார் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.