அகமதாபாத் ISIS சதித்திட்டத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக நபரை இலங்கையில் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அகமதாபாத் ISIS சதித்திட்டத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக நபரை இலங்கையில் கைது!


இந்த வார தொடக்கத்தில் இந்தியாவின் அகமதாபாத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேக நபர்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை இலங்கையின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) கொழும்பில் கைது செய்துள்ளனர்.


44 வயதான சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் தற்போது TID அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவ தெரிவித்தார்.


இலங்கை அதிகாரிகள் விசாரணையில் இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிரேஷ்ட டிஐஜி தலைமையில் சிறப்புக் குழுவொன்றை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமித்துள்ளதாகவும் டிஐஜி தல்துவ தெரிவித்தார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கையில் உள்ள பல நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.


நகரின் விமான நிலையம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரகசியத் தகவலைத் தொடர்ந்து, ISIS உடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு இலங்கையர்கள் இந்த வாரம் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.


பெரியமுல்லைச் சேர்ந்த 33 வயதான மொஹமட் நுஸ்ரத், கிராண்ட்பாஸைச் சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான், மாளிகாவத்தையைச் சேர்ந்த 35 வயதான மொஹமட் பாரிஸ் மற்றும் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 43 வயதான மொஹமட் ரஷ்டீன் ஆகியோர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களில் 27 வயதான மொஹமட் நஃப்ரான், 2004ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரபல குற்றவாளியான 'பொட்ட நௌபர்' எனப்படும் நியாஸ் நௌபரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் நான்கு சந்தேக நபர்களும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.