கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியும் சகோதரனும் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியும் சகோதரனும் கைது!


பெலியத்த கொஸ்கஹகொட பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயும் அவரது சகோதரரும் இணைந்து குறித்த பெண்ணின் கணவரை விஷத்தைக் கொடுத்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 20ஆம் திகதி வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் பிரேதப் பரிசோதனையின் போது விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்நிலையில் கைதான இருவரிடம் பொலிஸார் விசாரணை செய்த போது, கணவரின் குடிநீர் போத்தலில்  தங்கம் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனமான பதார்த்தத்தைக் கலந்ததாகத் தெரியவந்துள்ளது. 


பெலியஅத்த கொஸ்கஹாகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இன்று (26) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.