சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நிறுத்தப்படுவார் என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாம் அரசாங்க அமைச்சரை இணைத்துக் கொண்டதாகக் கூறிய சிறிசேன, விஜயதாச ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவியில் ஆசை இல்லை என்று கூறினார். 


நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பூரண ஆதரவைப் பெறுவார் என்றும், பெருமளவிலான கட்சி உறுப்பினர்கள் அமைச்சரை அங்கீகரிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். 


தாம் ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தாலும், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சிறிசேன கூறினார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்ததாக சிறிசேன கூறினார்.


தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் மேதின நினைவேந்தல் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.