குடும்பத்தில் மூவரை கொன்று நகை, பணம் கொள்ளை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குடும்பத்தில் மூவரை கொன்று நகை, பணம் கொள்ளை!


மலதெனிய பிரதேசத்தில் வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  மூவரைக் கொன்ற  சந்தேக நபரை நல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இந்த கொலை சம்பவம் இன்று  ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


துவிச்சக்கரவண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஒருவரை பொலிஸார் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்கப் நகைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 


இதன்படி சந்தேக நபரைக் கைது செய்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த கொலை சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.