ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசியின் ஜனாஸா அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று (21) அடக்கம் செய்யப்படவுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி, வெளி விவகார அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.
ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சரின் மறைவு தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லாஹ் அல் கமேனி, 5 நாள்களை துக்ககாலமாக பிரகடனம் செய்துள்ளார்.
ஈரான் மக்களுக்கு தமது கவலையை தெரிவிப்பதாக ஈரான் ஆன்மீகத் தலைவர் அறிவித்துள்ளார்.