6 சட்டவிரோத அதிசொகுசு வாகனங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நீதிமன்ற உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

6 சட்டவிரோத அதிசொகுசு வாகனங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நீதிமன்ற உத்தரவு!


சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 600 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு அதி சொகுசு SUV வாகனங்களின் உரிமையாளர்களை உடனடியாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


லங்காதீப நாளிதழின் படி, இந்த வாகனங்கள் நாட்டுக்கு 300 மில்லியன் ரூபா சுங்க வரியை இழக்கும் வகையில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதுடன், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ள தரவுகளை நீக்கி சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆறு முறைப்பாடுகளை தாக்கல் செய்திருந்த ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த வாகனங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் இந்த மூன்று மொண்டேரோக்கள் மற்றும் மூன்று சொகுசு ஜீப் வண்டிகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.