15 கோடி ரூபா போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

15 கோடி ரூபா போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்!


துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக்கின் உதவியாளர்கள் இருவர் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பன்னிப்பிட்டிய ருக்மல்கம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயது நபரொருவரும் 45 வயது பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள், 15 இலட்சம் ரூபா பணம் மற்றும் கார் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.