மோட்டார் பந்தய விபத்து; இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் பந்தய விபத்து; இருவர் கைது!


தியத்தலாவ நரியகந்த ஃபாக்ஸ்ஹில் ஓட்டப் பந்தயத்தின் போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்த வாகன விபத்தில் இருவர் சந்தேகத்தின் பேரில் இன்று (22) கைது செய்யப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.


Foxhill மோட்டார் பந்தயத்தின் பந்தய இலக்கம் 5 இன் கீழ் போட்டியிட்ட மாத்தறை மெடபாறை ஹித்தெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒருவரும், பந்தய இலக்கம் 196 இன் கீழ் போட்டியிட்ட பேராதனை மகந்த பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று (21) தியத்தலாவ, நர்யகந்தேவில் ஃபாக்ஸ்ஹில் மோட்டார் பந்தயம் நடைபெற்றது.


பந்தயத்தின் போது ஒரு கார் தடத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானது, அதைப் பார்க்கச் சென்றபோது, ​​அங்கு இருந்த கடும் புழுதியால் பாதையில் போட்டியிட்டுக் கொண்டிருந்த இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில், ஏழு பேர் உயிரிழந்தனர். இதில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.