சிவனொளிபாத மலையிலிருந்து கீழே குதித்த இளைஞன் 4 நாட்களுக்கு பின்னர் மீட்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிவனொளிபாத மலையிலிருந்து கீழே குதித்த இளைஞன் 4 நாட்களுக்கு பின்னர் மீட்பு!!


சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில், கடந்த 19ஆம் திகதி உடமலுவ பகுதியிலிருந்து  கீழே குதித்து காணாமல் போயிருந்த சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதன்னி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் நேற்று காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தோட்ட தொழிலாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நல்லதண்ணி பொலிஸார் இளைஞனை மீட்டனர்.


இளைஞனின் உடலில் கீறல் காயங்கள் காணப்பட்டன. மலையிலிருந்து குதித்தது எதுவும் நினைவில் இல்லையென்றும், 3 நாட்களாக ஓடையில் நடந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.


3 நாட்களாக உணவு உண்ணாததால் அவர் பலவீனமாக காணப்பட்டார். இளைஞன் சிகிச்சைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இளைஞரைத் தேடுவதற்காக 3 நாட்களாக விசேட நடவடிக்கையை மேற்கொண்டு பின்னர் அதனை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.