உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுதலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுதலை!


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட ஐவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதுவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, உலப்பன  சுமங்கல தேரர் உள்ளிட்ட நான்கு பேரை தலா இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையிலும் மற்றுமொரு சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


அத்துடன், உலப்பன சுமங்கல தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், நாரஹேன்பிட்டி பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பல குடிசை வீடுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.