பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து பணம் கொள்ளை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து பணம் கொள்ளை!


ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்கு உபட்ட தஹய்யாகல பிரதேசத்தில் 52 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரின் வீட்டிலிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்  தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


இந்த சம்பவம் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளார்.


சம்பவ தினத்துக்கு முன்னைய தினம், பாதிக்கப்பட்ட பெண்ணின் அயல் வீட்டில்  நபரொருவர் இந்தப் பெண்ணின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு, அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில், இந்தப் பெண் இரவு உறங்கச் சென்றபோது, வீட்டுக்கு வெளியில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ள நிலையில் அவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவைத் திறந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபரொருவர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்


சந்தேக நபர் வீட்டிலிருந்த 50 ஆயிரம் ரூபா பணத்தையும் கொன்னையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், சஞ்சு என்ற அயல் வீட்டு உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.