அரபு நாட்டில் பரிதாப பலியான இலங்கை பெண்ணின் சடலம் இலங்கை வந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரபு நாட்டில் பரிதாப பலியான இலங்கை பெண்ணின் சடலம் இலங்கை வந்தது!


ஐக்கிய அரபு அமீரகத்தில் உயிரிழந்த இலங்கை பெண்ணான ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஷார்ஜா நகரில் நிலத்தடி மின் அமைப்பு மின்சாரம் கசிந்து தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.


களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஜயமினி சந்தமாலி விஜேசிங்க, என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


இவர் மத்துகம C.W.W. கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தில் கணிதப் பிரிவில் உயர்தரம் படித்த மாணவியாகும்.


அவர் தனது சகோதரர் மூலம் வரவேற்பாளராக 11 மாதங்கள் பணிபுரிந்தார். கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து எதிரே அமைந்துள்ள கடைக்கு செல்வதற்காக வந்துள்ளார்.


அந்த நேரத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெய்த தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


இந்த வெள்ளத்தால், மின் அமைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத சந்தமாலி வெள்ள நீரில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.


அந்த நேரத்தில், இரண்டு எகிப்தியர்கள், ஒரு பங்களாதேஷ் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் ஆகியோரும் இந்த இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.