50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை பெண்!


அமெரிக்காவில் நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய துஷாரி ஜெயக்கொடி வெற்றி பெற்று இன்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.


37 நாடுகள் பங்கேற்ற இந்த உலக அழகி போட்டியானது இந்த மாதம் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.


37 நாடுகளிலிருந்து உலக அழகிகளுக்கு மத்தியில் பெரும் போட்டி நிலவியதாகவும் அதில் வெற்றி பெற்றது இலங்கைக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் எனவும் துஷாரி ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். 


இவர் 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் இலங்கையில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் வெற்றி பெற்று, இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.