3 மில்லியன் நிதி மோசடி; நமிதா தம்பதியினர் சிஐடியினரால் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

3 மில்லியன் நிதி மோசடி; நமிதா தம்பதியினர் சிஐடியினரால் கைது!


நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


நிதி மோசடி தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (04) சரணடைந்த நிலையில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நிதி மோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நடிகை மற்றும் அவரது கணவருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று பயணத்தடை விதித்துள்ளது.


இந்த வார தொடக்கத்தில், குடிவரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டத்தின் கீழ் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவுக்கான தம்பதியினரின் கோரிக்கையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. 


தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் வெளிநாட்டு வேலைகளை பெற்று தருவதாக கூறி பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.