சிறந்த எழுத்தாளர் விருது பெற்றார் கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறந்த எழுத்தாளர் விருது பெற்றார் கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட்!

இந்திய இலங்கை நட்புறவு ஒன்றியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10), கண்டியில் நடாத்திய "மலையகம் 200" விருது வழங்கும் நிகழ்வின் போது, கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

ஓய்வுபெற்ற ஆசிரியையும் பன்னூலாசிரியரும், இலக்கிய ஆளுமையுமான இவர், முன்னாள் ஆளுநரும், முன்னாள் மத்திய மாகாண சபை முதலமைச்சருமான சரத் ஏக்கநாயக்க உட்பட்ட அதிதிகளிடமிருந்து இவ்விருதைப் பெற்றுக்கொண்டார்.

சிறந்த இலக்கிய பெண் ஆளுமையான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீதுக்கு இவ்விருது கிடைத்தமையையிட்டு, இலக்கிய வட்டத்தினர் பலரும் இவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி பாராட்டு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.