ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மைத்திரியின் வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மைத்திரியின் வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைப்பு!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தமை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் 6 மணித்தியாலங்களுக்கு மேலாக மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


இந்த வாக்குமூலம் நேற்று திங்கட்கிழமை ​(25) பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தமக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி கண்டியில், மார்ச் 22ஆம் திகதியன்று தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்ததை அடுத்து மைத்திரிபால சிறிசேன சிஐடியில், நேற்று ஆஜரானார்


அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.