இன்றைய பரீட்சை வினாத்தாள்கள் நேற்று இரவு சமூக வலைதளங்களில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய பரீட்சை வினாத்தாள்கள் நேற்று இரவு சமூக வலைதளங்களில்!

மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் இன்று (01) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை வருட இறுதிப் பரீட்சையின் சில வினாத்தாள்கள் நேற்று (29) இரவு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆசிரியர்கள் குழுவொன்று முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான வருட இறுதி மதிப்பீட்டுப் பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெறுகின்றன.

அதன்படி, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இன்று நடத்த திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரம் 10 இன் விஞ்ஞான முதலாம் வினாத்தாள் மற்றும் தரம் 11 தொடர்பான விஞ்ஞான இரண்டாம் வினாத்தாள் நேற்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஹோமாகம, மொரட்டுவ மற்றும் கம்பஹா பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.

மேலும், நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்ட வினாத்தாள்களை இன்று மாணவர்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.