![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikScwjOaHyjZGDd8-a_qN_NYL84A-SpTH5nRuTqCLLwj9RTrg42WS74eh6iWV5_ZInshceaxd-voB-z3v9cJ92CHK64d_ZCKXjaKz45ZjKUw1hmRpXZxCDNQJF7R9VZQ6VDP8MZDyQiv3PcQXPW-byLiHRKX-ybjA5gNBz7R8GX51L7Dppi221eFCZTWV2/s16000/IMG_9851.jpeg)
இந்நிலையில், இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆசிரியர்கள் குழுவொன்று முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான வருட இறுதி மதிப்பீட்டுப் பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெறுகின்றன.
அதன்படி, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இன்று நடத்த திட்டமிடப்பட்டது.
எவ்வாறாயினும், மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரம் 10 இன் விஞ்ஞான முதலாம் வினாத்தாள் மற்றும் தரம் 11 தொடர்பான விஞ்ஞான இரண்டாம் வினாத்தாள் நேற்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஹோமாகம, மொரட்டுவ மற்றும் கம்பஹா பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
மேலும், நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்ட வினாத்தாள்களை இன்று மாணவர்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.