வாசனை பொருட்களுக்கான மீள் ஏற்றுமதிக்கான இறக்குமதிக்கு தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாசனை பொருட்களுக்கான மீள் ஏற்றுமதிக்கான இறக்குமதிக்கு தடை!


மிளகு உட்பட பல வகையான வாசனைப் பொருட்களை மீள் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்வதற்கு அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கையில் விளையும் மிளகு, சாதிக்காய், மஞ்சள், இஞ்சி, ஏலக்காய் போன்ற சில வாசனைப் பொருட்களை மீள் ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.


நேற்றைய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.


மீள் ஏற்றுமதிக்காக இந்த வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம், உள்ளூர் விவசாயிகள் ஊக்கமிழப்பதாகவும், அதனால் உள்ளூர் வாசனைப் பொருட்களின் பயிர்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


அத்துடன், தற்போது உலகின் சிறந்த வாசனைப் பொருட்களில் முதலிடத்தில் உள்ள இலங்கையின் வாசனைப் பொருட்களின் தரத்தில் இது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்தவும், மீள் ஏற்றுமதி செய்வதற்காக இலங்கைக்கான வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.


உள்ளூர் வாசனைப் பொருட்களின் தரத்தை மேலும் பேணுவதற்கான நீண்ட ஆய்வை மேற்கொள்வது குறித்தும், உள்ளூர் வாசனைப் பொருட்களை தோட்டப் பயிர்களாக மேலும் வளர்ப்பதற்கு அரசாங்கம் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.