கெஹெலியவின் பெயரின் உள்ள பாடசாலை பெயர் நீக்கப்பட வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கெஹெலியவின் பெயரின் உள்ள பாடசாலை பெயர் நீக்கப்பட வேண்டும்!


கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, முன்னாள் அ​மைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயரில் கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் அந்த பெயரை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


1996ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் உயிருள்ள ஒருவரின் பெயரை பாடசாலைக்கு பெயரிட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆனால் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமூகத்திற்கு தவறான உதாரணத்தை காட்டி குண்டசாலை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட்டுள்ளார்.


எனவே, உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு வைப்பதற்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோசப் ஸ்டார்லிங் வலியுறுத்தினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.