பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம் - இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்.. சிங்க முகத்தை காட்டிய ஜெய்ஷா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம் - இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்.. சிங்க முகத்தை காட்டிய ஜெய்ஷா

இதில் நான்கு பிரிவுகள் எப்போதும் போல் இருக்கிறது. இதில் அதிகபட்ச சம்பளமான ஏ ப்ளஸ் பிரிவில் உள்ள வீரர்களுக்கு 7 கோடி ரூபாய் கொடுக்கப்படும். அந்த வகையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இதை அடுத்து கிரேட் ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இதில் தமிழக வீரர் அஸ்வின், முகமது சமி, முகமது சிராஜ் ,கே எல் ராகுல்,கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். கிரேட் பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

இதில் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ்,ரிஷப் பந்த்,குல்தீப் யாதவ்,அக்சர் பட்டேல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். குரூப் சி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். அதில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சர்துல் தாக்கூர், சிவம் துபே, ரவி பிஷ்னாய், ஜிதேஷ் சர்மா வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன்,ஆர்ஸ்தீப் சிங் கே எஸ் பரத்,பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகியோருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ரஞ்சிப் போட்டியில் விளையாடாமல் இருந்த ஸ்ரேயாஸ் மற்றும் இசான் கிஷன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதேபோன்று ஆகாஷ் தீப், விஜயகுமார் விசாக், உமர் மாலிக் காவேரியப்பா போன்ற வீரர்களுக்கு சிறப்பு ஒப்பந்தத்தை வழங்க தேர்வு குழு பரிந்துரை செய்திருப்பதாக பிசிசிஐ கூறி இருக்கிறது.

இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ எடுத்து இருக்கும் நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சர்பராஸ் கான் போன்ற வீரர்களுக்கு புதிய ஒப்பந்தத்தில் இடம் அளிக்கவில்லை. எனினும் குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் அல்லது 8 ஒரு நாள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடி இருந்தால் அவர்களுக்கு கிரேட் சி பிரிவில் இணைக்கப்படுவார்கள் என்று பிசிசி ஐ விளக்கம் அளித்துள்ளது .அந்த வகையில் ஸர்ஃபிராஸ் கான் கிரேட் சி பிரிவில் இடம் பெறுவார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.