ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இனை விற்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான அழைப்பு தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இனை விற்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான அழைப்பு தொடர்பான அறிவிப்பு!

ஶ்ரீலன்கன் எயார்லைன்ஸ் இனை விற்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான அழைப்பு 5வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விற்பனைக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து விலைமனுக்களை அழைப்பதற்கான கால அவகாசம் 5வது தடவையாகவும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 6ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விற்பனைக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் விலைமனுக்கள் கோரும் நடவடிக்கை கடந்த டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்பின், 4 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் கடந்த காலங்களில் பல தடவைகள் தெரிவிக்கப்பட்டது.

நேற்றும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.