எலி காரணமாக ஶ்ரீலன்கன் விமானம் பாகிஸ்தானில் 03 நாட்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எலி காரணமாக ஶ்ரீலன்கன் விமானம் பாகிஸ்தானில் 03 நாட்கள்!

நேற்றைய முன் தினம் ஶ்ரீலங்கன் விமானங்கள் தாமதமானதற்கு நிறுவனத்தின் நிர்வாகக் கோளாறே காரணம் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், அன்றைய தினம் விடுமுறை எடுத்த 13 ஊழியர்களை பணி நீக்கம் செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

நேற்று முன்தினம் காலை விமான நிலையத்தில் உள்ள செக்-இன் கவுன்டர்களில் தாமதம் ஏற்பட்டதால், இந்தியா, பங்களாதேஷ், மலேசியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருந்த விமானங்களில் தாமதம் ஏற்பட்டது.

இது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு நேற்று முன்தினம் ஏற்பட்ட விமான தாமதத்திற்கான காரணத்தை அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும் பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை விமானம் ஒன்று பறக்க முடியாமல் விமானத்திற்குள் எலி புகுந்தமையால்  3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது தெரியவந்தது.

எனினும் அமைச்சரவை கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி அமைச்சர் அங்கிருந்து செல்ல தயாராகியத இந்த கூட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. 
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.